கடவுளுடைய கட்டளைகள் அடங்கிய நூல் எது? ஞானம் (பாரூ.4:1)
சமாதானம், ஒப்பந்தம் ஆகியவற்றின் நினைவு எதில் எழுதப்பட்டது? வெண்கலத் தகடுகளில் (1மக்.8:21)
சாலமோன் வேண்டிக் கொண்ட போது நெருப்பு இறங்கி வந்து யாது செய்தது? பலிப் பொருள்களை எரித்தது (2மக்.2:10)
பேச்சுப் போட்டி. (மனப்பாடம் செய்து சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.)
லூக். 1:46-56 அதைக் கேட்ட மரியா பின்வருமாறு கூறினார்:
ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர். ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்: உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்: தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்: செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார். மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்: தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார் . மரியா ஏறக்குறைய மூன்று மாதம் எலிசபெத்தோடு தங்கியிருந்த பின்பு தம் வீடு திரும்பினார்.
அவர் எப்பொழுதும் கடிந்து கொள்பவரல்லர் என்றென்றும் சினங்கொள்பவரல்லர்.
அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை: நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை.
அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவுபோன்று உயர்ந்தது.
மேற்கினின்று கிழக்கு எத்துணைத்; தொலைவிலுள்ளதோ: அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார்.
தந்தை தம் பிள்ளைகள்மீது இரக்கம் காட்டுவதுபோல் ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர் மீது இரங்குகிறார்.
பாடல் போட்டி
வைரம் பொன்னு முத்து இரத்தினம் ஈடாகுமா வார்த்தைக்கீடாகுமா ஆண்டவர் இயேசுவின் வார்த்தை படைப்பிற்கெல்லாம் மேலானதே (2)
கவலைக் கண்ணீர் வேதனை துன்பம் என்ன வந்தாலும் என்ன கஸ்டம் வந்தாலும் நம்ம கடவுளின் வார்த்தை கஸ்டம் போக்கும் மருந்தாகுமே வியாதி வருத்தம் நீக்கும் வாழ்வின் அமுதும் விருந்தாகுமே.
வாழ்க்கைப் பாதை வழிகள் முற்றும் அடைக்கப்பட்டாலும் எல்லாம் இருண்டு போனாலும் என்னில் இயேசுவின் வார்த்தை என்றும் எனக்கு வழியாகுமே பள்ளத்தாக்குகள் முகடுகள் மலைகளில் பாதைக்கொளியாகுமே
அண்ணன்மாரே தங்கைமாரே தெரிந்துகொள்ளுங்க ஒன்றைப்புரிந்து கொள்ளுங்க விவிலிய தேவ வசனம் அனைத்தையும் செய்யும் ஆற்றல் மிக்கது உடலின் எலும்புகள் மூட்டுக்கள் சதைக்குள் உயிரின் ஆவியை ஊற்றுவது.
18.08.2010
பிரிவு 09. (01.01.1996 – 31.12.1996 ஆண்டில் பிறந்தவர்கள்
ஆன்மீக அறிவுப் போட்டிகள் - 2010 சுவிஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம்.
பிரிவு 09. (01.01.1996 – 31.12.1996 ஆண்டில் பிறந்தவர்கள்)
வேதாகம வினாவிடைப் போட்டி
அவருக்காக பாதையைச் செம்மைப்படுத்துங்கள் என்று கூறிய இறைவாக்கினர் யார்? இறைவாக்கினர் எசாயா (மத்.3:3)
திருமுழுக்கு யோவானின் உணவு யாது? வெட்டுக்கிளியும், காட்டுத்தேனும் (3:4)
நற்கனி கொடாத மரங்களுக்கு என்ன நடக்கும்? வெட்டப்பட்டு தீயில் போடப்படும் (3:10)
இயேசு தூய ஆவியால் எங்கே அழைத்துச் செல்லப்பட்டார்? பாலைவனத்திற்கு (4:1)
இயேசுவின் முதல் போதநை யாது? “மனம் மாறுங்கள் ஏனெனில் விண்ணரசு நெருங்கிவிட்டது” ; (4:16)
கடவுளைக் காண்போர் யார்? தூய உள்ளத்தோர் (5:8)
ஏன் விண்ணுலகின் மீது ஆணையிடக் கூடாது? அது கடவுளின் அரியணை (5:34)
கடவுள் யார்மேல் கதிரவனை உதித்தெழச் செய்கிறார்? நல்லோர் மேலும் தீயோர் மேலும் (5:45)
மற்றவர்களின் குற்றங்களை நாம் மன்னித்தால் என்ன நடக்கும்? விண்ணகத் தந்தை நம்மை மன்னிப்பார் (6:15)
இயேசுவின் சீடர் எத்தனை பேர்? பன்னிரெண்டு (10:1)
யாருக்கு எதிரான பழிப்புரை மன்னிக்கப்படாது? தூய ஆவிக்கு (12:31)
மானிட மகன் எத்தனை நாள் நிலத்தின் உள்ளே இருப்பார்? மூன்று பகலும் மூன்று இரவும் (12:40)
இயேசு தோற்றம் மாறிய போது அவருடன் சென்றவர்கள் யாவர்? பேதுரு, யாக்கோபு, யோவான் (17:1)
விண்ணரசில் நுழைவதனால் நாம் யாரைப் போல் ஆகவேண்டும்? சிறுவர்களைப் போல் (18:3)
மணமகனை எதிர்கொள்ளச் சென்ற பத்துப்பேரும் எப்படிப்பட்டவாகள்? ஐவர் அறிவிலிகள், ஐவர் முன்மதியுடையேர் (25:2)
இயேசு விடியற் காலையில் கருக்கலில் எழுந்து எங்கே சென்றார்? தனிமையான ஓர் இடத்திற்கு (மாற்.1:35)
எப்பத்தா” என்பதன் பொருள் யாது? “திறக்கப்படு” (7:34)
இயேசு ஏழு அப்பங்களைக் கொண்டு எத்தனை பேருக்கு உணவளித்தார்? நாலாயிரம் பேருக்கு (8:9)
யாருடைய பிறப்பால் பலரும் மகிழ்ச்சியடைவர் என்று வானதூதர் செக்கரியாவுக்குக் கூறினார்? திருமுழுக்கு யோவானின் பிறப்பால் (லூக்.1:14)
வேதாகமத்தில் பழைய ஏற்பாட்டின் முதல் நூல் எது? தொடக்க நூல்.
வேதாகமத்தில் புதிய ஏற்பாட்டின் முதல் நூல் எது? மத்தேயு நற்செய்தி.
வேதாகமத்தில் பழைய ஏற்பாட்டின் கடைசி நூல் எது? மக்கபேயர் இரண்டாம் நூல்.
வேதாகமத்தில் புதிய ஏற்பாட்டின் கடைசி நூல் எது? திருவெளிப்பாடு.
வேதாகமத்தில் திருப்பாடல்கள் எத்தனை? 150.
வேதாகமத்தில் பாஸ்கா நிகழ்ச்சியை விரித்துரைக்கும் நூல் எது? விடுதலைப் பயணம்;.
வேதாகமத்தில் வழிபடுவதற்கான முறைகளும், குருக்களுக்கான நெறிமுறைகளும் அடங்கிய நூல் எது? லேவியர்.
ஆண்டவரே பேசும் உம் அடியான் கேட்கிறேன் என்று சொன்னவர் யார்? சாமுவேல்.
வேதாகமத்தில் தொடக்க காலத் திருச்சபையின் வாழ்க்கை பற்றிக் கூறும் நூல் எது? திருத்தூதர் பணிகள்.
வேதாகமத்தின் இருபெரும் முக்கிய பிரிவுகள் எவை? புதிய ஏற்பாடு, பழைய ஏற்பாடு.
பேச்சுப் போட்டி.(மனப்பாடம் செய்து சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.)
மத். 5:1-12
இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர்.அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை:
ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர் ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. துயருறுவோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர். கனிவுடையோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர். நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் நிறைவுபெறுவர். இரக்கமுடையோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர். நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர் ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது. என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்.
திருப்பாடல் போட்டி (இராகத்தோடு சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.)
திருப்பாடல். 95:1-11
95 வாருங்கள் ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள் நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்.
நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம் புகழ்ப் பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம்.
ஏனெனில், ஆண்டவர் மாண்புமிகு இறைவன் தெய்வங்கள் அனைத்திற்கும் மேலான பேரரசர்.
பூவுலகின் ஆழ்பகுதிகள் அவர்தம் கையில் உள்ளன மலைகளின் கொடுமுடிகளும் அவருக்கே உரியன.
கடலும் அவருடையதே அவரே அதைப் படைத்தார் உலர்ந்த தரையையும் அவருடைய கைகளே உருவாக்கின.
வாருங்கள் தாள்பணிந்து அவரைத் தொழுவோம் நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம்.
அவரே நம் கடவுள் நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள் நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்!
அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர் என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர்.
நாற்பது ஆண்டளவாய் அந்தத் தலைமுறை எனக்கு வெறுப்பூட்டியதால், நான் உரைத்தது 'அவர்கள் உறுதியற்ற உள்ளம் கொண்ட மக்கள் என் வழிகளை அறியாதவர்கள்'.
எனவே, நான் சினமுற்று, 'நான் அளிக்கும் இளைப்பாற்றியின் நாட்டிற்குள் நுழையவே மாட்டார்கள்' என்று ஆணையிட்டுக் கூறினேன்.
பாடல் போட்டி
வைரம் பொன்னு முத்து இரத்தினம் ஈடாகுமா வார்த்தைக்கீடாகுமா ஆண்டவர் இயேசுவின் வார்த்தை படைப்பிற்கெல்லாம் மேலானதே (2)
கவலைக் கண்ணீர் வேதனை துன்பம் என்ன வந்தாலும் என்ன கஸ்டம் வந்தாலும் நம்ம கடவுளின் வார்த்தை கஸ்டம் போக்கும் மருந்தாகுமே வியாதி வருத்தம் நீக்கும் வாழ்வின் அமுதும் விருந்தாகுமே.
வாழ்க்கைப் பாதை வழிகள் முற்றும் அடைக்கப்பட்டாலும் எல்லாம் இருண்டு போனாலும் என்னில் இயேசுவின் வார்த்தை என்றும் எனக்கு வழியாகுமே பள்ளத்தாக்குகள் முகடுகள் மலைகளில் பாதைக்கொளியாகுமே
அண்ணன்மாரே தங்கைமாரே தெரிந்துகொள்ளுங்க ஒன்றைப்புரிந்து கொள்ளுங்க விவிலிய தேவ வசனம் அனைத்தையும் செய்யும் ஆற்றல் மிக்கது உடலின் எலும்புகள் மூட்டுக்கள் சதைக்குள் உயிரின் ஆவியை ஊற்றுவது.
15.08.2010
பிரிவு 08. (01.01.1997 – 31.12.1997 ஆண்டில் பிறந்தவர்கள்
ஆன்மீக அறிவுப் போட்டிகள் - 2010 சுவிஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம்.
பிரிவு 08. (01.01.1997 – 31.12.1997 ஆண்டில் பிறந்தவர்கள்)
வேதாகம வினாவிடைப் போட்டி
அவருக்காக பாதையைச் செம்மைப்படுத்துங்கள் என்று கூறிய இறைவாக்கினர் யார்? இறைவாக்கினர் எசாயா (மத்.3:3)
திருமுழுக்கு யோவானின் உணவு யாது? வெட்டுக்கிளியும், காட்டுத்தேனும் (3:4)
இயேசு தூய ஆவியால் எங்கே அழைத்துச் செல்லப்பட்டார்? பாலைவனத்திற்கு (4:1)
கடவுளைக் காண்போர் யார்? தூய உள்ளத்தோர் (5:8)
ஏன் விண்ணுலகின் மீது ஆணையிடக் கூடாது? அது கடவுளின் அரியணை (5:34)
கடவுள் யார்மேல் கதிரவனை உதித்தெழச் செய்கிறார்? நல்லோர் மேலும் தீயோர் மேலும் (5:45)
மற்றவர்களின் குற்றங்களை நாம் மன்னித்தால் என்ன நடக்கும்? விண்ணகத் தந்தை நம்மை மன்னிப்பார் (6:15)
இயேசுவின் சீடர் எத்தனை பேர்? பன்னிரெண்டு (10:1)
யாருக்கு எதிரான பழிப்புரை மன்னிக்கப்படாது? தூய ஆவிக்கு (12:31)
மானிட மகன் எத்தனை நாள் நிலத்தின் உள்ளே இருப்பார்? மூன்று பகலும் மூன்று இரவும் (12:40
இயேசு தோற்றம் மாறிய போது அவருடன் சென்றவர்கள் யாவர்? பேதுரு, யாக்கோபு, யோவான் (17:1)
விண்ணரசில் நுழைவதனால் நாம் யாரைப் போல் ஆகவேண்டும்? சிறுவர்களைப் போல் (18:3)
மணமகனை எதிர்கொள்ளச் சென்ற பத்துப்பேரும் எப்படிப்பட்டவாகள்? ஐவர் அறிவிலிகள், ஐவர் முன்மதியுடையேர் (25:2)
இயேசு விடியற் காலையில் கருக்கலில் எழுந்து எங்கே சென்றார்? தனிமையான ஓர் இடத்திற்கு (மாற்.1:35)
எப்பத்தா” என்பதன் பொருள் யாது? “திறக்கப்படு” (7:34)
இயேசு ஏழு அப்பங்களைக் கொண்டு எத்தனை பேருக்கு உணவளித்தார்? நாலாயிரம் பேருக்கு (8:9)
வேதாகமத்தில் பழைய ஏற்பாட்டின் முதல் நூல் எது? தொடக்க நூல்.
வேதாகமத்தில் புதிய ஏற்பாட்டின் முதல் நூல் எது? மத்தேயு நற்செய்தி.
வேதாகமத்தில் பழைய ஏற்பாட்டின் கடைசி நூல் எது? மக்கபேயர் இரண்டாம் நூல்.
வேதாகமத்தில் புதிய ஏற்பாட்டின் கடைசி நூல் எது? திருவெளிப்பாடு.
வேதாகமத்தில் திருப்பாடல்கள் எத்தனை? 150.
வேதாகமத்தில் பாஸ்கா நிகழ்ச்சியை விரித்துரைக்கும் நூல் எது? விடுதலைப் பயணம்;.
வேதாகமத்தில் வழிபடுவதற்கான முறைகளும், குருக்களுக்கான நெறிமுறைகளும் அடங்கிய நூல் எது? லேவியர்.
ஆண்டவரே பேசும் உம் அடியான் கேட்கிறேன் என்று சொன்னவர் யார்? சாமுவேல்.
வேதாகமத்தில் தொடக்க காலத் திருச்சபையின் வாழ்க்கை பற்றிக் கூறும் நூல் எது? திருத்தூதர் பணிகள்.
வேதாகமத்தின் இருபெரும் முக்கிய பிரிவுகள் எவை? புதிய ஏற்பாடு, பழைய ஏற்பாடு.
பேச்சுப் போட்டி. (மனப்பாடம் செய்து சமர்ப்பிக்கப்படல் வேண்டும்)
லூக். 10:38-42 அவர்கள் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்போது இயேசு ஓர் ஊரை அடைந்தார். அங்கே பெண் ஒருவர் அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். அவர் பெயர் மார்த்தா. அவருக்கு மரியா என்னும் சகோதரி ஒருவர் இருந்தார். மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
ஆனால் மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இயேசுவிடம் வந்து, ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டு விட்டாளே, உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி புரிய அவளிடம் சொல்லும் என்றார்.
ஆண்டவர் அவரைப் பார்த்து, மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள்: அது அவளிடமிருந்து எடுக்கப்படாது என்றார்.
67 கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக!
அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும் பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்து கொள்வர்.
கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக!
வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர் உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர்.
கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக!
நானிலம் தன் பலனை ஈந்தது கடவுள், நம் கடவுள் நமக்கு ஆசி வழங்கினார்.
கடவுள் நமக்க ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக!
பாடல் போட்டி.
வைரம் பொன்னு முத்து இரத்தினம் ஈடாகுமா வார்த்தைக்கீடாகுமா ஆண்டவர் இயேசுவின் வார்த்தை படைப்பிற்கெல்லாம் மேலானதே (2)
கவலைக் கண்ணீர் வேதனை துன்பம் என்ன வந்தாலும் என்ன கஸ்டம் வந்தாலும் நம்ம கடவுளின் வார்த்தை கஸ்டம் போக்கும் மருந்தாகுமே வியாதி வருத்தம் நீக்கும் வாழ்வின் அமுதும் விருந்தாகுமே.
வாழ்க்கைப் பாதை வழிகள் முற்றும் அடைக்கப்பட்டாலும் எல்லாம் இருண்டு போனாலும் என்னில் இயேசுவின் வார்த்தை என்றும் எனக்கு வழியாகுமே பள்ளத்தாக்குகள் முகடுகள் மலைகளில் பாதைக்கொளியாகுமே
அண்ணன்மாரே தங்கைமாரே தெரிந்துகொள்ளுங்க ஒன்றைப்புரிந்து கொள்ளுங்க விவிலிய தேவ வசனம் அனைத்தையும் செய்யும் ஆற்றல் மிக்கது உடலின் எலும்புகள் மூட்டுக்கள் சதைக்குள் உயிரின் ஆவியை ஊற்றுவது.
15.08.2010
பிரிவு 07. (01.01.1998 – 31.12.1998 ஆண்டில் பிறந்தவர்கள்
ஆன்மீக அறிவுப் போட்டிகள் - 2010 சுவிஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம்.
பிரிவு 07. (01.01.1998 – 31.12.1998 ஆண்டில் பிறந்தவர்கள்)
வேதாகம வினாவிடைப் போட்டி
அவருக்காக பாதையைச் செம்மைப்படுத்துங்கள் என்று கூறிய இறைவாக்கினர் யார்? இறைவாக்கினர் எசாயா (மத்.3:3)
திருமுழுக்கு யோவானின் உணவு யாது? வெட்டுக்கிளியும், காட்டுத்தேனும் (3:4)
இயேசு தூய ஆவியால் எங்கே அழைத்துச் செல்லப்பட்டார்? பாலைவனத்திற்கு (4:1)
கடவுளைக் காண்போர் யார்? தூய உள்ளத்தோர் (5:8)
ஏன் விண்ணுலகின் மீது ஆணையிடக் கூடாது? அது கடவுளின் அரியணை (5:34)
கடவுள் யார்மேல் கதிரவனை உதித்தெழச் செய்கிறார்? நல்லோர் மேலும் தீயோர் மேலும் (5:45)
மற்றவர்களின் குற்றங்களை நாம் மன்னித்தால் என்ன நடக்கும்? விண்ணகத் தந்தை நம்மை மன்னிப்பார் (6:15)
இயேசுவின் சீடர் எத்தனை பேர்? பன்னிரெண்டு (10:1)
யாருக்கு எதிரான பழிப்புரை மன்னிக்கப்படாது? தூய ஆவிக்கு (12:31)
மானிட மகன் எத்தனை நாள் நிலத்தின் உள்ளே இருப்பார்? மூன்று பகலும் மூன்று இரவும் (12:40
விண்ணரசில் நுழைவதனால் நாம் யாரைப் போல் ஆகவேண்டும்? சிறுவர்களைப் போல் (18:3)
மணமகனை எதிர்கொள்ளச் சென்ற பத்துப்பேரும் எப்படிப்பட்டவாகள்? ஐவர் அறிவிலிகள், ஐவர் முன்மதியுடையேர் (25:2)
இயேசு விடியற் காலையில் கருக்கலில் எழுந்து எங்கே சென்றார்? தனிமையான ஓர் இடத்திற்கு (மாற்.1:35)
எப்பத்தா” என்பதன் பொருள் யாது? “திறக்கப்படு” (7:34)
இயேசு ஏழு அப்பங்களைக் கொண்டு எத்தனை பேருக்கு உணவளித்தார்? நாலாயிரம் பேருக்கு (8:9)
முடக்குவாதமுற்றவரை எவ்வாறு இயேசுவின் முன் கொண்டு வந்தார்கள்? கூரைமேல் ஏறி ஓடுகளைப் பிரித்து (5:19)
பகைவர்களுக்கு என்ன செய்ய வேண்டும்? நன்மை செய்ய வேண்டும் (6:35)
ஏழு பேய்கள் நீங்கப் பெற்றவர் யார்? மகதலா மரியா (8:2)
ஆண்டவரின் காலடியில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தது யார்? மரியா (10:39)
இறந்த இலாசர் எங்கே இருந்தார்? ஆபிரகாமின் மடியில் (16:23)
சக்கேயு இயேசுவை பார்ப்பதற்காக எதில் ஏறினார்? காட்டு அத்திமரத்தில் (19:4)
கானாவூர் திருமண வீட்டில் எத்தனை கல் தொட்டிகளில் நீர் நிரப்பினர்? ஆறு (2:6)
என் தந்தையின் இல்லத்தைச் சந்தையாக்காதீர்கள்” என்று இயேசு யாரிடம் கூறினார்? புறா விற்போரிடம் (2:16)
இயேசு செய்த முதலாவது அரும் அடையாளம் எது? தண்ணீரை இரசமாக்கியது (2:8)
இலாசர் இறந்த எத்தனையாம் நாள் இயேசு அவரை உயிர்ப்பித்தார்? நான்காம் நாள் (11:39)
யூதாசுக்குப் பதிலாகத் தெரிந்து கொள்ளப்பட்ட திருத்தூதர் யார்? மத்தியா (திப.1:26)
தூய ஆவிபற்றி முன்னறிவித்த இறைவாக்கினர் யார்? யோவேல் (2:16)
சிறையில் அடைக்கப்பட்ட திருத்தூதர்களை காப்பாற்றியது யார்? ஆண்டவரின் தூதர் (5:19)
சவுல் எங்கு செல்லும் போது அழைப்புப் பெற்றார்? தமஸ்கு நகருக்கு (9:3)
ஆண்டவரே நீர் யார்?” என்ற சவுலின் கேள்விக்கு ஆண்டவரின் பதில் யாது? “நீ துன்புறுத்தும் இயேசு நானே (9:6)
பேதுருவை சிறையிலிருந்து இரவில் அழைத்து சென்றது யார்? ஆண்டவரின் தூதர் (12:7)
பவுல் எதனை முன்னிட்டு வெட்கப்பட மாட்டேன் என்கிறார்? நற்செய்தியை முன்னிட்டு (உரோ.1:16)
கடவுள் ஏன் எம்மேல் பரிவுகாட்டுகிறார்? எம்மை மனம்மாறச் செய்வதற்கு (2:4)
கடவுள் எவ்வாறு செயல்படுவதில்லை? ஆள்பார்த்துச் செயல்படுவதில்லை (2:11)
ஆவிக்குரிய மனநிலை கொண்டிருப்போருக்கு வருவது யாது? வாழ்வும் அமைதியும் (8:6)
இக்காலத்தில் கடவுள் எதனைப் பொறுமையோடு காட்டிவருகிறார்? தமது நீதியை (3:26)
திருச்சட்டத்தின் நிறைவு எது? அன்பு (13:10)
பெருமை பாராட்ட விரும்புவோர் எதில் பெருமை பாராட்டவேண்டும்? ஆண்டவரைக் குறித்து (1கொரி.1:31)
கடவுளின் கோவிலாகிய எம்மில் குடியிருப்பவர் யார்? கடவுளின் ஆவியார் (3:16)
தூய ஆவி தங்கும் கோவில் எது? எமது உடல் (6:19)
நாம் எதைச் செய்தாலும் எதற்காகச் செய்ய வேண்டும்? கடவுளுடைய மாட்சிக்காக (10:31)
ஆறுதல் அனைத்துக்கும் ஊற்று யார்? இரக்கம் நிறைந்த கடவுள் (2கொரி.1:3)
கடவுளின் அன்புக்கு உரியவர் யார்? முகமலர்ச்சியோடு கொடுப்பவர் (9:7)
கிறிஸ்து வழியாய் நாம் பெறும் இரு பயன்கள் எவை? மீட்பு, மன்னிப்பு (எபே.1:7)
நாம் எதனைப் புரிந்து கொள்ள வேண்டும்? ஆண்டவருடைய திருவுளத்தை (5:17)
பிறரை நாம் எவ்வாறு கருத வேண்டும்? எம்மிலும் உயர்ந்தவர்களாக (பிலி.2:3)
எமது தாய் நாடு எது? விண்ணகம் (3:20)
லூக்காவின் தொழில் யாது? மருத்துவம் (4:14)
கடவுளின் திட்டம் எதை அடிப்படையாகக் கொண்டது? விசுவாசத்தை (1திமோ.1:4)
கிறிஸ்து எதன் வழியாக அழியா வாழ்வை ஒளிரச் செய்தார்? நற்செய்தியின் வழியாக (2திமோ.1:10)
நம்மிடையே உள்ள நட்பு எவ்விதம் இருக்க வேண்டும்? செயல் வடிவம் (பில.1:6)
கடவுள் எவற்றை மனிதனுக்கு முடியாகச் சூட்டியுள்ளார்? மாட்சியையும், மேன்மையையும் (எபி.2:7)
சாலேம் அரசர் என்பதன் பொருள் யாது? அமைதியின் அரசர் (7:2)
நாம் எவ்வாறு இருக்க வேண்டும்? தூய்மையுள்ளவர்களாய் (1பேது.1:15)
நாம் எவ்வாறு ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு காட்டவேண்டும்? தூய உள்ளத்தோடு (1:22
தன் சகோதரரை வெறுப்போர் எங்கே வாழ்கின்றார்கள்? இருளில் (2:11)
கடவுள் தோன்றும் போது நாம் எப்படியிருப்போம்? அவரைப் போல் இருப்போம் (3:2)
வேதாகமத்தில் பழைய ஏற்பாட்டின் முதல் நூல் எது? தொடக்க நூல்.
வேதாகமத்தில் புதிய ஏற்பாட்டின் முதல் நூல் எது? மத்தேயு நற்செய்தி.
வேதாகமத்தில் பழைய ஏற்பாட்டின் கடைசி நூல் எது? மக்கபேயர் இரண்டாம் நூல்.
வேதாகமத்தில் புதிய ஏற்பாட்டின் கடைசி நூல் எது? திருவெளிப்பாடு.
வேதாகமத்தில் திருப்பாடல்கள் எத்தனை? 150.
வேதாகமத்தில் பாஸ்கா நிகழ்ச்சியை விரித்துரைக்கும் நூல் எது? விடுதலைப் பயணம்;.
வேதாகமத்தில் வழிபடுவதற்கான முறைகளும், குருக்களுக்கான நெறிமுறைகளும் அடங்கிய நூல் எது? லேவியர்.
ஆண்டவரே பேசும் உம் அடியான் கேட்கிறேன் என்று சொன்னவர் யார்? சாமுவேல்.
வேதாகமத்தில் தொடக்க காலத் திருச்சபையின் வாழ்க்கை பற்றிக் கூறும் நூல் எது? திருத்தூதர் பணிகள்.
வேதாகமத்தின் இருபெரும் முக்கிய பிரிவுகள் எவை? புதிய ஏற்பாடு, பழைய ஏற்பாடு.
பேச்சுப் போட்டி. (மனப்பாடம் செய்து சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.)
லூக். 8:11-15 இந்த உவமையின் பொருள் இதுவே: விதை, இறைவார்த்தை. வழியோரம் விழுந்த விதைகள், அவ்வார்த்தைகளைக் கேட்பவர்களுள் சிலரைக் குறிக்கும். அவர்கள் நம்பி மீட்புப் பெறாதவாறு அலகை வந்து அவ்வார்த்தையை அவர்கள் உள்ளத்திலிருந்து எடுத்துவிடுகிறது.
பாறைமீது விழுந்த விதைகள், அவ்வார்த்தையைக் கேட்கும்போது அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்பவர்களைக் குறிக்கும். ஆனால் அவர்கள் வேரற்றவர்கள் சிறிது காலமே அவ்வார்த்தையை நம்புவார்கள் சோதனைக் காலத்தில் நம்பிக்கையை விட்டுவிடுவார்கள்.
முட்செடிகளுக்குள் விழுந்த விதைகள், வார்த்தையைக் கேட்டும் கவலை, செல்வம், வாழ்வில் வரும் இன்பங்கள் போன்றவற்றால் நெருக்கப்பட்டு முதிர்ச்சி அடையாதிருப்பவர்களைக் குறிக்கும். நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ, சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருகிறவர்களைக் குறிக்கும்.
பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்: அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.
அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார் தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்.
மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன் உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும்.
என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர் என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர் எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது.
உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்துவரும் நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.
பாடல் போட்டி.
வைரம் பொன்னு முத்து இரத்தினம் ஈடாகுமா வார்த்தைக்கீடாகுமா ஆண்டவர் இயேசுவின் வார்த்தை படைப்பிற்கெல்லாம் மேலானதே (2)
கவலைக் கண்ணீர் வேதனை துன்பம் என்ன வந்தாலும் என்ன கஸ்டம் வந்தாலும் நம்ம கடவுளின் வார்த்தை கஸ்டம் போக்கும் மருந்தாகுமே வியாதி வருத்தம் நீக்கும் வாழ்வின் அமுதும் விருந்தாகுமே.
வாழ்க்கைப் பாதை வழிகள் முற்றும் அடைக்கப்பட்டாலும் எல்லாம் இருண்டு போனாலும் என்னில் இயேசுவின் வார்த்தை என்றும் எனக்கு வழியாகுமே பள்ளத்தாக்குகள் முகடுகள் மலைகளில் பாதைக்கொளியாகுமே
அண்ணன்மாரே தங்கைமாரே தெரிந்துகொள்ளுங்க ஒன்றைப்புரிந்து கொள்ளுங்க விவிலிய தேவ வசனம் அனைத்தையும் செய்யும் ஆற்றல் மிக்கது உடலின் எலும்புகள் மூட்டுக்கள் சதைக்குள் உயிரின் ஆவியை ஊற்றுவது.
15.08.2010
பிரிவு 06. (01.01.1999 – 31.12.1999 ஆண்டில் பிறந்தவர்கள்
ஆன்மீக அறிவுப் போட்டிகள் - 2010
சுவிஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம்.
பிரிவு 06. (01.01.1999 – 31.12.1999 ஆண்டில் பிறந்தவர்கள்)
வேதாகம வினாவிடைப் போட்டி
அவருக்காக பாதையைச் செம்மைப்படுத்துங்கள் என்று கூறிய இறைவாக்கினர் யார்?
இறைவாக்கினர் எசாயா (மத்.3:3)
திருமுழுக்கு யோவானின் உணவு யாது?
வெட்டுக்கிளியும், காட்டுத்தேனும் (3:4)
இயேசு தூய ஆவியால் எங்கே அழைத்துச் செல்லப்பட்டார்?
பாலைவனத்திற்கு (4:1)
கடவுளைக் காண்போர் யார்?
தூய உள்ளத்தோர் (5:8)
ஏன் விண்ணுலகின் மீது ஆணையிடக் கூடாது?
அது கடவுளின் அரியணை (5:34)
கடவுள் யார்மேல் கதிரவனை உதித்தெழச் செய்கிறார்?
நல்லோர் மேலும் தீயோர் மேலும் (5:45)
இயேசுவின் சீடர் எத்தனை பேர்?
பன்னிரெண்டு (10:1)
விண்ணரசில் நுழைவதனால் நாம் யாரைப் போல் ஆகவேண்டும்?
சிறுவர்களைப் போல் (18:3)
மணமகனை எதிர்கொள்ளச் சென்ற பத்துப்பேரும் எப்படிப்பட்டவாகள்?
ஐவர் அறிவிலிகள், ஐவர் முன்மதியுடையேர் (25:2)
இயேசு விடியற் காலையில் கருக்கலில் எழுந்து எங்கே சென்றார்?
தனிமையான ஓர் இடத்திற்கு (மாற்.1:35)
எப்பத்தா” என்பதன் பொருள் யாது?
“திறக்கப்படு” (7:34)
இயேசு ஏழு அப்பங்களைக் கொண்டு எத்தனை பேருக்கு உணவளித்தார்?
நாலாயிரம் பேருக்கு (8:9)
பகைவர்களுக்கு என்ன செய்ய வேண்டும்?
நன்மை செய்ய வேண்டும் (6:35)
ஏழு பேய்கள் நீங்கப் பெற்றவர் யார்?
மகதலா மரியா (8:2)
ஆண்டவரின் காலடியில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தது யார்?
மரியா (10:39)
இறந்த இலாசர் எங்கே இருந்தார்?
ஆபிரகாமின் மடியில் (16:23)
சக்கேயு இயேசுவை பார்ப்பதற்காக எதில் ஏறினார்?
காட்டு அத்திமரத்தில் (19:4)
கானாவூர் திருமண வீட்டில் எத்தனை கல் தொட்டிகளில் நீர் நிரப்பினர்?
ஆறு (2:6)
என் தந்தையின் இல்லத்தைச் சந்தையாக்காதீர்கள்” என்று இயேசு யாரிடம் கூறினார்?
புறா விற்போரிடம் (2:16)
இயேசு செய்த முதலாவது அரும் அடையாளம் எது?
தண்ணீரை இரசமாக்கியது (2:8)
இலாசர் இறந்த எத்தனையாம் நாள் இயேசு அவரை உயிர்ப்பித்தார்?
நான்காம் நாள் (11:39)
தூய ஆவிபற்றி முன்னறிவித்த இறைவாக்கினர் யார்?
யோவேல் (2:16)
சிறையில் அடைக்கப்பட்ட திருத்தூதர்களை காப்பாற்றியது யார்?
ஆண்டவரின் தூதர் (5:19)
சவுல் எங்கு செல்லும் போது அழைப்புப் பெற்றார்?
தமஸ்கு நகருக்கு (9:3)
ஆண்டவரே நீர் யார்?” என்ற சவுலின் கேள்விக்கு ஆண்டவரின் பதில் யாது?
“நீ துன்புறுத்தும் இயேசு நானே (9:6)
பேதுருவை சிறையிலிருந்து இரவில் அழைத்து சென்றது யார்?
ஆண்டவரின் தூதர் (12:7)
கடவுள் ஏன் எம்மேல் பரிவுகாட்டுகிறார்?
எம்மை மனம்மாறச் செய்வதற்கு (2:4)
கடவுள் எவ்வாறு செயல்படுவதில்லை?
ஆள்பார்த்துச் செயல்படுவதில்லை (2:11)
ஆவிக்குரிய மனநிலை கொண்டிருப்போருக்கு வருவது யாது?
வாழ்வும் அமைதியும் (8:6)
இக்காலத்தில் கடவுள் எதனைப் பொறுமையோடு காட்டிவருகிறார்?
தமது நீதியை (3:26)
திருச்சட்டத்தின் நிறைவு எது?
அன்பு (13:10)
பெருமை பாராட்ட விரும்புவோர் எதில் பெருமை பாராட்டவேண்டும்?
ஆண்டவரைக் குறித்து (1கொரி.1:31)
கடவுளின் கோவிலாகிய எம்மில் குடியிருப்பவர் யார்?
கடவுளின் ஆவியார் (3:16)
தூய ஆவி தங்கும் கோவில் எது?
எமது உடல் (6:19)
நாம் எதைச் செய்தாலும் எதற்காகச் செய்ய வேண்டும்?
கடவுளுடைய மாட்சிக்காக (10:31)
ஆறுதல் அனைத்துக்கும் ஊற்று யார்?
இரக்கம் நிறைந்த கடவுள் (2கொரி.1:3)
கடவுளின் அன்புக்கு உரியவர் யார்?
முகமலர்ச்சியோடு கொடுப்பவர் (9:7)
கிறிஸ்து வழியாய் நாம் பெறும் இரு பயன்கள் எவை?
மீட்பு, மன்னிப்பு (எபே.1:7)
பிறரை நாம் எவ்வாறு கருத வேண்டும்?
எம்மிலும் உயர்ந்தவர்களாக (பிலி.2:3)
எமது தாய் நாடு எது?
விண்ணகம் (3:20)
லூக்காவின் தொழில் யாது?
மருத்துவம் (4:14)
கடவுளின் திட்டம் எதை அடிப்படையாகக் கொண்டது?
விசுவாசத்தை (1திமோ.1:4)
நம்மிடையே உள்ள நட்பு எவ்விதம் இருக்க வேண்டும்?
செயல் வடிவம் (பில.1:6)
கடவுள் எவற்றை மனிதனுக்கு முடியாகச் சூட்டியுள்ளார்?
மாட்சியையும், மேன்மையையும் (எபி.2:7)
நாம் எவ்வாறு இருக்க வேண்டும்?
தூய்மையுள்ளவர்களாய் (1பேது.1:15)
நாம் எவ்வாறு ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு காட்டவேண்டும்?
தூய உள்ளத்தோடு (1:22
தன் சகோதரரை வெறுப்போர் எங்கே வாழ்கின்றார்கள்?
இருளில் (2:11)
கடவுள் தோன்றும் போது நாம் எப்படியிருப்போம்?
அவரைப் போல் இருப்போம் (3:2)
வேதாகமத்தில் பழைய ஏற்பாட்டின் முதல் நூல் எது?
தொடக்க நூல்.
வேதாகமத்தில் புதிய ஏற்பாட்டின் முதல் நூல் எது?
மத்தேயு நற்செய்தி.
வேதாகமத்தில் பழைய ஏற்பாட்டின் கடைசி நூல் எது?
மக்கபேயர் இரண்டாம் நூல்.
வேதாகமத்தில் புதிய ஏற்பாட்டின் கடைசி நூல் எது?
திருவெளிப்பாடு.
வேதாகமத்தில் திருப்பாடல்கள் எத்தனை?
150.
வேதாகமத்தில் பாஸ்கா நிகழ்ச்சியை விரித்துரைக்கும் நூல் எது?
விடுதலைப் பயணம்;.
வேதாகமத்தில் வழிபடுவதற்கான முறைகளும், குருக்களுக்கான நெறிமுறைகளும் அடங்கிய நூல் எது?
லேவியர்.
ஆண்டவரே பேசும் உம் அடியான் கேட்கிறேன் என்று சொன்னவர் யார்?
சாமுவேல்.
வேதாகமத்தில் தொடக்க காலத் திருச்சபையின் வாழ்க்கை பற்றிக் கூறும் நூல் எது?
திருத்தூதர் பணிகள்.
வேதாகமத்தின் இருபெரும் முக்கிய பிரிவுகள் எவை?
புதிய ஏற்பாடு, பழைய ஏற்பாடு.
பேச்சுப் போட்டி.(மனப்பாடம் செய்து சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.)
லூக்.9:1-6
இயேசு பன்னிருவரையும் ஒன்றாக வரவழைத்து, பேய்களையெல்லாம் அடக்கவும் பிணிகளைப் போக்கவும் வல்லமையும் அதிகாரமும் அவர்களுக்குக் கொடுத்தார். இறையாட்சிபற்றிப் பறைசாற்றவும் உடல் நலம் குன்றியோரின் பிணிதீர்க்கவும் அவர்களை அனுப்பினார்.
அப்போது அவர்களை நோக்கி, பயணத்திற்குக் கைத்தடி, பை, உணவு, பணம் போன்ற எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம். ஓர் அங்கி போதும். நீங்கள் எந்த வீட்டிக்குள் சென்றாலும் அங்கேயே தங்கியிருங்கள் அங்கிருந்தே புறப்படுங்கள்.
உங்களை ஏற்றுக் கொள்ளாதவர்களுடைய நகரைவிட்டுப் புறப்படும்போது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும் என்றார். அவர்கள் ஊர் ஊராகச் சென்று எங்கும் நற்செய்தியை அறிவித்து நோயாளிகளைக் குணமாக்கினார்கள்.
வேதாகமத்தில் பழைய ஏற்பாட்டின் முதல் நூல் எது?
தொடக்க நூல்.
வேதாகமத்தில் புதிய ஏற்பாட்டின் முதல் நூல் எது?
மத்தேயு நற்செய்தி.
வேதாகமத்தில் புதிய ஏற்பாட்டின் கடைசி நூல் எது? திருவெளிப்பாடு.
வேதாகமத்தில் திருப்பாடல்கள் எத்தனை?
150.
வேதாகமத்தில் பாஸ்கா நிகழ்ச்சியை விரித்துரைக்கும் நூல் எது?
விடுதலைப் பயணம்;.
வேதாகமத்தில் வழிபடுவதற்கான முறைகளும், குருக்களுக்கான நெறிமுறைகளும் அடங்கிய நூல் எது?
லேவியர்.
ஆண்டவரே பேசும் உம் அடியான் கேட்கிறேன் என்று சொன்னவர் யார்?
சாமுவேல்.
வேதாகமத்தில் தொடக்க காலத் திருச்சபையின் வாழ்க்கை பற்றிக் கூறும் நூல் எது?
திருத்தூதர் பணிகள்.
வேதாகமத்தின் இருபெரும் முக்கிய பிரிவுகள் எவை?
புதிய ஏற்பாடு, பழைய ஏற்பாடு.
பேச்சுப் போட்டி.(மனப்பாடம் செய்து சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.)
லூக். 4:16-20
இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார். இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது:
ஆண்டவருடைய ஆவி என்மேல் உள்ளது ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர். பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்.
பின்னர் அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார். தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன.
வேதாகமத்தில் பழைய ஏற்பாட்டின் முதல் நூல் எது? தொடக்க நூல்.
வேதாகமத்தில் புதிய ஏற்பாட்டின் முதல் நூல் எது? மத்தேயு நற்செய்தி.
வேதாகமத்தில் புதிய ஏற்பாட்டின் கடைசி நூல் எது? திருவெளிப்பாடு.
வேதாகமத்தில் திருப்பாடல்கள் எத்தனை? 150;.
வேதாகமத்தில் பாஸ்கா நிகழ்ச்சியை விரித்துரைக்கும் நூல் எது? விடுதலைப் பயணம்;.
ஆண்டவரே பேசும் உம் அடியான் கேட்கிறேன் என்று சொன்னவர் யார்? சாமுவேல்.
வேதாகமத்தின் இருபெரும் முக்கிய பிரிவுகள் எவை? புதிய ஏற்பாடு, பழைய ஏற்பாடு.
பேச்சுப் போட்டி.(மனப்பாடம் செய்து சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.)
மத். 9:9-13 இயேசு அங்கிருந்து சென்ற போது மத்தேயு என்பவர் சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்டார் அவரிடம், என்னைப் பின்பற்றி வா என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார். பின்பு அவருடைய வீட்டில் பந்தியில் அமர்ந்திருந்தபோது வரிதண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் வந்து இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர்.
இதைக் கண்ட பரிசேயர் அவருடைய சீடரிடம், உங்கள் போதகர் வரிதண்டுபவர்களோடும் இயேசு இதைக் கேட்டவுடன், நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதன் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக் கொள்ளுங்கள் ஏனெனில் நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன் என்றார்.
அப்பா அப்பா என்று உம்மை அழைத்தேன் என் மகனே என்று பதில் கொடுத்தீர் – 2
நடப்பதும் இருப்பதும் உம்மாலே உயிருடன் வாழ்வதும் உம் செயலே – 2
14.08.2010
பிரிவு 03. (01.01.2002 – 31.12.2002 ஆண்டில் பிறந்தவர்கள்
ஆன்மீக அறிவுப் போட்டிகள் - 2010 சுவிஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம்.
பிரிவு 03. (01.01.2002 – 31.12.2002 ஆண்டில் பிறந்தவர்கள்)
வேதாகம வினாவிடைப் போட்டி .
ஞானிகள் யேசுவுக்கு அளித்த காணிக்கைகள் எவை? பொன், சாம்பிராணி, வெள்ளைப்போளம் (2:11)
அவருக்காக பாதையயைச் செம்மைப்படுத்துங்கள் என்று கூறிய இறைவாக்கினர் யார்? இறைவாக்கினர் எசாயா (3:3)
இயேசு தூய ஆவியால் எங்கே அழைத்துச் செல்லப்பட்டார்? பாலைவனத்திற்கு (4:1)
ஏன் விண்ணுலகின் மீது ஆணையிடக் கூடாது? அது கடவுளின் அரியணை (5:34)
மற்றவர்களின் குற்றங்களை நாம் மன்னித்தால் என்ன நடக்கும்? விண்ணகத் தந்தை நம்மை மன்னிப்பார் (6:15)
யாருக்கு எதிரான பழிப்புரை மன்னிக்கப்படாது? தூய ஆவிக்கு (12:31)
இயேசு விடியற் காலையில் கருக்கலில் எழுந்து எங்கே சென்றார்? தனிமையான ஓர் இடத்திற்கு (1:35)
இயேசு ஏழு அப்பங்களைக் கொண்டு எத்தனை பேருக்கு உணவளித்தார்? நாலாயிரம் பேருக்கு (8:9)
இறுதிவரை மன உறுதியுடன் இருப்பவருக்கு என்ன நடக்கும்? மீட்புப் பெறுவர் (13:13)
மெசியாவைக் காணுமுன் சாகப்போவதில்லை என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தவர் யார்? சிமியோன் (2:25)
இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எங்கே செல்வர்? எருசலேமுக்கு (2:41)
தொழுகைக் கூடத்தில் இயேசுவுக்கு வாசிக்கக் கொடுத்த சுருளேடு யாருடையது? இறைவாக்கினர் எசாயாவினுடையது (4:17)
இயேசு ஏன் சீடர்களை விழித்திருந்து இறைவனிடம் வேண்டும் படி கூறினார்? சோதனைக்குட்படாதிருக்க (22:46)
இயேசு உயிர்த்த நாளன்று சீடர்களுள் இருவர் எங்கே சென்று கொண்டிருந்தனர்? எம்மாவு (24:13)
இயேசு செய்த முதலாவது அரும் அடையாளம் எது? தண்ணீரை இரசமாக்கியது (2:8)
இயேசு தமக்கு எது தேவையில்லை என்று கூறுகிறார்? மனிதர் தரும் பெருமை (5:41)
நிலை வாழ்வைக் கொண்டுள்ளோர் யார்? இயேசுவை நம்புவோர் (6:47)
எந்தக் குளத்திற்குப் போய் கண்களைக் கழுவும்படி இயேசு பார்வையற்றவருக்குக் கூறினார்? சிலோவாம் குளத்தில் (9:7)
இலாசர் இறந்த எத்தனையாம் நாள் இயேசு அவரை உயிர்ப்பித்தார்? நான்காம் நாள் (11:39)
உண்மையான திராட்சைச் செடி யார்? இயேசு (15:1)
இயேசு உயிர்த்தெழுந்த பின்பு எத்தனை நாள்களாகச் சீடர்களுக்குத் தோன்றினார்? நாற்பது நாட்கள் (1:3)
சீடர்கள் ஒலிவ மலையிலிருந்து திரும்பி எங்கே சென்றார்கள்? எருசலேமுக்கு (1:12)
தூய ஆவிபற்றி முன்னறிவித்த இறைவாக்கினர் யார்? யோவேல் (2:16)
கால் ஊனமுற்ற ஒருவர் அமர்ந்திருந்த இடம் எது? கோயிலின் அழகுவாயிலில் (3:2)
சிறையில் அடைக்கப்பட்ட திருத்தூதர்களை காப்பாற்றியது யார்? ஆண்டவரின் தூதர் (5:19)
ஸ்தேவானைக் கொலை செய்வதற்கு உடன்பட்டிருந்தது யார்? சவுல் (8:1)
சவுல் எங்கு செல்லும் போது அழைப்புப் பெற்றார்? தமஸ்கு நகருக்கு (9:3)
கடவுள் எவ்வாறு கைம்மாறு அளிப்பார்? அவரவர் செயல்களுக்கேற்ப (2:6)
ஆவிக்குரிய மனநிலை கொண்டிருப்போருக்கு வருவது யாது? வாழ்வும் அமைதியும் (8:6)
திருச்சட்டத்தின் நிறைவு எது? அன்பு (13:10)
பேச்சுப் போட்டி .(மனப்பாடம் செய்து சமர்ப்பிக்கப்படவேண்டும்.) மத். 3:13-17
அதன்பின் இயேசு யோவானிடம் திருமுழுக்குப் பெறக் கலிலேயாவிலிருந்து யோர்தானுக்கு வந்தார். யோவான், நான்தான் உம்மிடம் திருமுழுக்குப் பெற வேண்டியவன்: நீரா என்னிடம் வருகிறீர்? என்று கூறித் தடுத்தார். இயேசு, இப்பொழுது விட்டுவிடும். கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதுதான் முறை எனப் பதிலளித்தார். அதற்கு யோவானும் இணங்கினார். இயேசு திருமுழுக்குப் பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளியேறினார். உடனே வானம் திறந்ததையும் கடவுளின் ஆவி, புறா இறங்குவது போலத் தம்மீது வருவதையும் அவர் கண்டார். அப்பொழுது, என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.
பாடல் போட்டி.
ஆராதனை (2) இயேசு இறைவனே ஆராதனை (2) இம்மானுவேலனே (2)
ஆண்டவரே மெசியாவே ஆளும் அரசரே (2) அருள்பொழிவு பெற்றவரே எங்கள் மீட்பரே (2)
உலகினரின் பாவம் போக்கும் இறைவன் செம்மறியே (2) பலரின் நோய்கள் பிணிகள் தீர்க்கும் நல்ல மருத்துவரே (2)
கடவுளுக்கு அர்ப்பணமான கடவுளின் மகனே (2) கண்ணீர் அனைத்தும் துடைத்துவிடும் நீதியின் தேவனே (2)
14.08.2010
பிரிவு 02. (01.01.2003 – 31.12.2003 ஆண்டில் பிறந்தவர்கள்
ஆன்மீக அறிவுப் போட்டிகள் - 2010 சுவிஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம்.
பிரிவு 02. (01.01.2003 – 31.12.2003 ஆண்டில் பிறந்தவர்கள்)
வேதாகம வினாவிடைப் போட்டி .
இயேசு தம் மக்களை எவற்றிலிருந்து மீட்டார்? பாவங்களிலிருந்து (1:21)
இம்மானுவேல் என்பதன் பொருள்; யாது? கடவுள் நம்மோடு (1:23)
மலைப் பொழிவில் வரும் பேறுகள் எத்தனை? எட்டு (5:3)
கடவுளைக் காண்போர் யார்? தூய உள்ளத்தோர் (5:8)
நாம் எங்கே செல்வம் சேர்த்து வைக்கக் கூடாது? மண்ணுலகில் (6:19)
இயேசு விடியற் காலையில் கருக்கலில் எழுந்து எங்கே சென்றார்? தனிமையான ஓர் இடத்திற்கு (1:35)
இயேசு உயிர்ப்பித்த சிறுமியின் வயது யாது? பன்னிரெண்டு (5:42)
“எப்பத்தா” என்பதன் பொருள் யாது? திறக்கப்படு (7:34)
ஆண் தலைப்பேறு யாவும் யாருக்கு அர்ப்பணிக்கப்படும்? ஆண்டவருக்கு (2:23)
மெசியாவைக் காணுமுன் சாகப்போவதி;ல்லை என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தவர் யார்? சிமியோன் (2:25)
இயேசு தமது பணியைத் தொடங்கிய போது அவருடைய வயது யாது? முப்பது (3:23)
இயேசு தாம் தெரிந்தெடுத்த பன்னிருவருக்கும் இட்ட பெயர் யாது? திருத்தூதர் (6:14)
ஆண்டவரின் காலடியில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தது யார்? மரியா (10:39)
சக்கேயு இயேசுவை பார்ப்பதற்காக எதில் ஏறினார்? காட்டு அத்திமரத்தில் (19:4)
இயேசு ஏன் சீடர்களை விழித்திருந்து இறைவனிடம் வேண்டும் படி கூறினார்? சோதனைக்குட்படாதிருக்க (22:46)
“இதோ கடவுளின் ஆட்டுக் குட்டி” என்று யோவான் யாரைக் குறித்து காட்டினார்? இயேசுவை (1:36)
“என் தந்தையின் இல்லத்தைச் சந்தையாக்காதீர்கள்” என்று இயேசுயாரிடம் கூறினார்? புறா விற்போரிடம் (2:16)
மரியா இயேசுவை யாரென்று எண்ணினாள்? தோட்டக்காரன் என்று (20:15)
“நீ என் மீது அன்பு செலுத்துகிறாயா? என்று இயேசு சீமோனிடம் எத்தனை தடவை கேட்டார்? மூன்று தடவை (21:17)
பேச்சுப் போட்டி. (மனப்பாடம் செய்து சமர்ப்பிக்கப்படவேண்டும்)
மத். 3:10-12 ஏற்கெனவே மரங்களின் வேரருகே கோடரி வைத்தாயிற்று. நற்கனி தராத மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டுத் தீயில் போடப்படும். நீங்கள் மனம் மாறுவதற்காக நான் தண்ணீரால் திருமுழுக் குக் கொடுக்கிறேன். எனக்குப் பின் ஒருவர் வருகிறார். அவர் என்னைவிட வலிமை மிக்கவர். அவருடைய மிதியடிகளைத் தூக்கிச் செல்லக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார். அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார் தம் கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார் ஆனால், பதரை அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார் என்றார்.
பாடல் போட்டி.
ஆராதனை (2) இயேசு இறைவனே ஆராதனை (2) இம்மானுவேலனே (2)
ஆண்டவரே மெசியாவே ஆளும் அரசரே (2) அருள்பொழிவு பெற்றவரே எங்கள் மீட்பரே (2)
உலகினரின் பாவம் போக்கும் இறைவன் செம்மறியே (2) பலரின் நோய்கள் பிணிகள் தீர்க்கும் நல்ல மருத்துவரே (2)
கடவுளுக்கு அர்ப்பணமான கடவுளின் மகனே (2) கண்ணீர் அனைத்தும் துடைத்துவிடும் நீதியின் தேவனே (2)