சுயநலம் ,மனித உயிர்களை மதியாமை என்பன எம்மை அழிவுக்கே இட்டுச்செல்லும்: என வத்திக்கானோடு உறவைக்கொண்டுள்ள 178 நாடுகளின் வெளியுறவு கொள்கை வகுப்பாளர்கள் மத்தியில் இம்மாதம் 11ம் திகதி உரையாற்றிய திருத்தந்தை 16ம் ஆசீர்வாதப்பர் தெரிவித்தார்.
 போர், பட்டினி, அடக்குமுறை, சுற்றாடலை சீரழித்தல், தற்கால பொருளாதார நெருக்கடி என்பன உண்மையாகவே சுயநலத்தினதும் , மனித உயிர்களை மதிக்காததினதும் விளைவாகும் என அவர் மேலும் தெரிவித்தார். இச் சந்திப்பின்போது திருத்தந்தையவர்கள் இந்நாடுகளின் தூதுவர்களைத் தனித் தனியாகச் சந்தித்து உரையாடினார். ,
|