Javascript DHTML Image Web Scroller Powered by dhtml-menu-builder.com
Javascript DHTML Drop Down Menu Powered by dhtml-menu-builder.com
கெயிற்றியில் ஏற்பட்ட நில நடுக்கத்தினால் பேராயர் மரணம்.

கெயிற்றியில் இம்மாதம் 12ம் திகதி செவ்வாய்க் கிழமை ஏற்பட்ட நில நடுக்கத்தினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களுள் 63 வயதான கெயிற்றி நாட்டின் பேராயர் அதி மேன்மைமிகு யோசேப் சேர்கே மீஒற் ஆண்டகை அவர்களும் அடங்குகின்றார். நிகழ்வொன்றிற்கு வருகைதரவிருந்த விருந்தினரை வரவேற்பதற்காக மாடி முகப்பு வரவேற்பு மண்டபத்தில் நின்றுகொண்டிருந்த போது நில நடுக்கம் ஏற்பட்டது. இவ் வேளையில் இந் நில நடுக்கத்தினால் பேராயர் அவாகள் தூக்கி எறியப்படதினால் மரணமடைந்ததாக கெயிற்றிக்கான திருத்தந்தையின் பிரதிநிதி பேராயர் அதி மேன்மைமிகு பெர்னாடிற்றோ அவுசா தெரிவித்தள்ளார். பேராயர் அதி மேன்மைமிகு யோசேப் சேர்கே மீஒற் ஆண்டகை அவர்கள் கெயிற்றியின் போர்ட் அவ் பிறின்ஸ் என்னும் பேராயர் மறைமாவட்டத்தில் பணியாற்றி வந்தார்.கெயிற்றி கத்தோலிக்க ஆயர் பேரவையின் நீதி சமாதானப் பிரிவிற்கு நீண்ட காலமாகப்
பொறுப்பாக இருந்து கெயிற்றி மக்களின் துயர் துடைத்தவர் இப்பேராயர் அவர்கள்.

அத்தோடு 85 வயதான கெயிற்றியின் முதல் சலேசியன் சபை அருட்சகோதரர் கியுபேட் சானோன் அவர்களும் இந் நில நடுக்கத்தில் கொல்லப்பட்டார்.சிறந்த கல்விமானான இவர் கெயிற்றியில் அமைந்துள்ள சலேசியன் துறவற சபையின் உயர்கல்வி நிலையத்தில் பணியாற்றி பல மாணவர்களை சிறந்த கல்வியாளர்களாக உருவாக்கியுள்ளார்.

 

 

15.01.2010 Views=65